ரமழானில் பெற்ற தொடரான பயிற்சியை வாழ்வில் நிலைநாட்டுவோம்:ஜமாஅத்தே இஸ்லாமியின் பெருநாள் செய்தி

Date:

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி..

ஈதுல் பித்ர் என்னும் நோன்பு பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈத் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பெருமகிழ்ச்சி அடைகிறது.

மனித சமூகத்துக்கு வழிகாட்டும் அல்குர்ஆன் அருளப்பட்ட ரமழான் மாதத்தை கௌரவிக்கும் வகையில் அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட நோன்பின் பிரதான இலக்கு இறை அச்சத்தை வளர்த்துக்கொள்வது என்பதை நாம் அறிவோம்.

நோன்பு நோற்று இரவு வணக்கங்களில் ஈடுபட்டு தக்பீர் சொல்லி இறைவனுடைய நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் நாம் சகாத்துல் ஃபித்ராவை முறையாக வழங்கி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சலாம் கூறி வாழ்த்துத் தெரிவித்து மனிதர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்திக் கொள்கின்றோம்.

நாம் ரமழானில் பெற்ற தொடரான பயிற்சியை வாழ்வில் எந்த அளவுக்கு நிலைநாட்டுகிறோம் என்பதிலேயே வாழ்க்கையின் வெற்றி தங்கியுள்ளது.

நாம் இப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டு இஸ்ரேலின் கொடுமைகளுக்கு இலக்காகிக் கொண்டிருக்கும் பலஸ்தீன மக்களுக்கு ஈடேற்றம் கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கௌரவமாக வாழ ஒரு வழி பிறக்க வேண்டும் என்றும் இந்த நல்ல நாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக.

Popular

More like this
Related

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) – பஹன மீடியா குழுமத்திற்குமிடையே நடைபெற்ற சினேகபூர்வ சந்திப்பு!

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக "தூய இலங்கை" எனும் மகுடம் தாங்கி...

வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 316,000 வாகனங்கள் இறக்குமதி...

சமச்சீரற்ற ஒத்திசைவு: இலங்கை தனது பன்முகத்தன்மையை ஒரு பலமாக மாற்ற முடியுமா?

-ரிசா யெஹியா சிரேஷ்ட பொறியியலாளர். இலங்கையில் மீண்டும் மீளும் சமூகத் தகராறுகள் உடனடி பிரச்சினையை...

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலாக,...