ரமழான் 27ஆவது இரவில் புனித மக்காவில் வெள்ளம் போல் திரண்ட முஸ்லிம்கள்! (படங்கள்)

Date:

புனித ரமழான் மாதத்தில் முக்கிய இரவாக கருதப்படுகின்ற ‘லைலதுல் கத்ர்’ என்ற 27ஆவது இரவு நேற்றைய தினம் புனித மக்காவிலுள்ள புனித ஹரம் ஷரீபில் மில்லியன் கணக்கான மக்களுடைய பிரசன்னத்துடன் இடம்பெற்றது.

வரலாற்றில் எப்போதுமில்லாத அளவுக்கு மக்கள் ஒன்றுகூடிய இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் 3 கிலோ மீற்றர் தூரத்தையும் தாண்டிச் செல்லும் அளவுக்கு வரிசைகளில் நிற்கின்ற காட்சிகள் ஊடகங்களினூடாக வெளியாகியுள்ளன.

‘லைலத்துல் கத்ர்’ என்பது அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவை குறிக்கிறது. இந்த இரவில் மக்கள் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தும் தொழுகைகளில் ஈடுபட்டும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். இந்த இரவில் செய்கின்ற வணக்கம் ஆயிரம் மாதங்களுக்கு சமனானது என புனித குர்ஆன் கூறுகின்றது.

இறை ஆற்றலால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கும் இந்த இரவின் நீளம் மற்ற இரவுகளின் நீளத்தை விட நீண்டதில்லை. அதனால்தான் என்னவோ இந்த இரவின் ஒரு நொடியைக் கூட முஸ்லிம்கள் வீணடிக்க விரும்புவது இல்லை.

இந்த இரவில் அவர்கள் தூக்கத்தைத் தவிர்த்து, திரு குர்ஆனை ஓதி, தொழுகையில் ஈடுபட்டு, இறை வழிபாட்டில் மூழ்கி, ஆன்மிகத்தில் திளைத்து, லயித்து இருப்பர். இந்த இரவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வழிபாடு பாவங்களிலிருந்து விடுதலை அளிக்கும் என்பது நம்பிக்கை.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...