உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு நோக்கி பயணமான இந்திய பிரதமர் மோடி

Date:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறினார்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு ரயில் பாலத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். மேலும் இந்த நிகழ்விற்காக அவர் தமிழகம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்தியப் பிரதமர்  தனது ‘X’ கணக்கில், தனது விஜயத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அவர் மிகவும் நன்றியுள்ளவராக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும், இது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக பலத்தை சேர்க்கும் என்றும் இந்தியப் பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...