சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

Date:

பண்டிகை காலத்தில் தூரப் பிரயாணங்களை மேற்கொள்வோரின் வசதி கருதி, விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, சேவைக்காக 500 பேருந்துகள் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 40 ரயில் சேவைகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து, பதுளை, பெலியத்த, திருகோணமலை, கண்டி, அனுராதபுரம் மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இந்த விசேட ரயில் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • வெள்ளிக்கிழமை (11) இரவு 7.30 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு ஒரு ரயில் இயக்கப்படுவதோடு அதே குறிப்பிட்ட நேரத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
  • வெள்ளிக்கிழமை (11) இரவு 7.20 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதே நேரத்தில் காலியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
  • வெள்ளிக்கிழமை (11) காலை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (18) மீண்டும் திரும்பும்.

இந்த 10 சிறப்பு ரயில்களும் நீண்ட வார விடுமுறை நாட்களில் 31 பயணங்களை மேற்கொள்ளும் என ரயில்வே  திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான பேருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...