பாப்பரசர் பிரான்ஸிஸ் உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளியிட்டது வத்திக்கான்

Date:

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

பாப்பரசர் தனது 88 வயதில் நேற்று திங்கட்கிழமை (21) காலமானார்.

“பக்கவாதம், கோமா மற்றும் மீளமுடியாத இருதய சுற்றோட்ட செயலிழப்பு” ஆகியவற்றின் காரணமாக மரணித்துள்ளதாக  வத்திக்கான் சுகாதார பணிப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி கையொப்பமிட்ட இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவு உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்களுக்குச் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கத்தோலிக்கத் திருச்சபையில் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து போப்பாக தேர்வான முதல் தலைவர் என்ற சாதனையைப் படைத்தவர் போப் பிரான்சிஸ். இந்த ஆண்டு இரட்டை நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அதில் இருந்து மீண்டபோதும் உடல்நிலை முழுமையாகச் சீராகவில்லை.

இருந்தாலும் வீல் சேரில் இருந்தபடி ஞாயிற்றுக்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் மக்களைச் சந்தித்திருந்தார். அவர் உடல்நிலை சீராகி வருவதாக மக்கள் கருதிய நிலையில், எதிர்பாராத விதமாகக் காலமானார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...