பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் காலமானார்

Date:

Leicester, Mark feild இல் உள்ள Islamic Foundation இன் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் நேற்று தனது 93 ஆவது வயதில் காலமானார்.

பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் இஸ்லாமிய பொருளாதாரம், நிதியியல், நவீன இஸ்லாமிய இயக்கங்கள் விவகாரங்களில் முன்னணி இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்தார்.

இஸ்லாமிய பொருளாதாரத்தின் தந்தை எனக் கருதப்படும் இவர் 70 க்கு மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும் உருதிலும் எழுதி உள்ளார்.

இவரது பல நூல்கள் பல்வேறு மொழிகளுக்கும் மொழி பெயர்க்கப்பட்டு இவரது புலமை உலகமயப்படுத்தப்பட்டுள்ளது. 1973 இல் குர்ரம் முராதுடன் இணைந்து இவர் உருவாக்கிய இஸ்லாமிய நிலையம் நடுநிலை இஸ்லாமிய சிந்தனைக்கான மையமாக விளங்குகிறது.

பிரிட்டிஷ் இந்தியாவில் 1932 இல் பிறந்த பேராசிரியர் குர்ஷித் அஹ்மத், பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தார். பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...