அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத சம்பளத்தை நாளைய தினம் வழங்க வேண்டும்

Date:

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத சம்பளத்தை நாளைய தினம் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க, ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தின் அடிப்படையில் வரவு, செலவுத் திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட சம்பளத்தை நாளைய தினம் வழங்க முடியாவிட்டால், அந்த நிலுவைத் தொகையை ஏப்ரல் 25 ஆம் திகதி வழங்க வேண்டும் எனவும் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது .

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்துவதற்கும் அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கும் தொழில் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...