இரு கண்களிலும் பார்வை இழந்த நிலையில் ஜும்ஆ பிரசங்கம் செய்து தன்னுடைய திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய அஷ்ஷெய்க் அர்கம் ஹசனி!

Date:

காத்தான்குடி செயின் மெளலானா ஜும்மாப் பள்ளிவாயலில் நேற்று(25) (வெள்ளிக்கிழமை) ஜும்ஆப் பேருரை சிறப்பாக நடைபெற்றது.

இரண்டு கண்களும் பார்வையற்ற விஷேட தேவையுடைய அறிஞர் அஷ்ஷெய்க் MJM அர்கம் ஹசனி அவர்கள் இந்த ஜும்ஆப் பயானை நிகழ்த்தி அனைவரையும் ஈர்த்தார்.

மனிதாபிமானம் மற்றும் ஒற்றுமையை மையமாக கொண்டு வழங்கிய அவரது உரை, சிறப்பாகவும் ஆழமாகவும் இருந்தது. பார்வையிழந்திருந்தாலும் உலகத்தை மிக தெளிவாக புரிந்து வைத்திருக்கும் அவரது ஆற்றல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஜும்ஆ முடிவில், அர்கம் ஹசனி அவரை நேரில் சந்தித்த பள்ளிவாயல் நிர்வாகிகள், எதிர்வரும் ஜும்ஆக்களில் போதைவஸ்துக்கள் எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். இதற்கு அவரும் ஒப்புதல் வழங்கினார்.

இத்தகைய அருமையான ஜும்ஆப் பேருரையை ஏற்பாடு செய்த செயின் மெளலானா பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு சமூகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...