2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் தொடர்பான ஏதேனும் விதிமுறைகள் நடைமுறையிலிருந்தால், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அந்த விதிமுறைகள் அனைத்தும் ரத்தாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு காணப்படுகின்ற பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இந்த சட்டத்தை இரத்து செய்வதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.