உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு நோக்கி பயணமான இந்திய பிரதமர் மோடி

Date:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறினார்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு ரயில் பாலத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். மேலும் இந்த நிகழ்விற்காக அவர் தமிழகம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்தியப் பிரதமர்  தனது ‘X’ கணக்கில், தனது விஜயத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அவர் மிகவும் நன்றியுள்ளவராக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும், இது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக பலத்தை சேர்க்கும் என்றும் இந்தியப் பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...