எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் உறுதியுள்ள காசா மக்கள்!

Date:

காசா பகுதியில் நடைபெறும் இஸ்ரேலிய கொடூரத் தாக்குதல்களால் அடிப்படை வசதிகளெல்லாம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றும் புத்திசாலித்தனமான முயற்சிகளால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றனர்.

சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோவில், துவிச்சக்கர வண்டியின் செயினை பயன்படுத்தி, அதன் சக்தியால் தையல் இயந்திரத்தை இயக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இயந்திரத்தினூடாக அவர்கள் தங்களுக்கே தேவையான ஆடைகளை தைத்துக் கொள்கிறார்கள்.

மின்சாரம், எரிபொருள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒரு பயங்கரமான யுத்த சூழ்நிலையை எதிர்கொண்டு, இப்படி வாழ்க்கையை முன்னெடுத்து செல்வது காசா மக்களின் உறுதி மற்றும் படைப்பு திறனை எடுத்துக்காட்டுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, காசா மக்களின் நிலைமையை மட்டுமல்லாமல், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அதற்கான தீர்வுகளையும் உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...