கட்டாயப் பிரேத பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம்!

Date:

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களுக்கு பிரேத பரிசோதனைகள் நடத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

25.04.2025 திகதியிட்ட 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் மரணங்களும் கட்டாயமாக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சு சுற்று நிருபம் அறிவித்திருந்தது. .

சிறுவர் மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்கு இது அத்தியாவசியமானது எனவும் காரணங்களைக் கண்டறிவதன் மூலம் இறப்புக்களைக் குறைக்க முடியும் எனவும் நீதி அமைச்சின் சுற்றறிக்கை சுட்டிக் காட்டியிருந்தது.

நிபுணத்துவ குழுவொன்றின் அறிக்கையை பெறும் வரை இதனை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சு  அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...