கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்திலிருந்து பலஸ்தீனத்துக்கு 2 மில்லியன் ரூபா நன்கொடை

Date:

பலஸ்தீன மக்களின்  மனிதாபிமான தேவைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம் சேகரித்த, 2 மில்லியன் ரூபாவை கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

கண்டி  பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக், செயலாளர் என்.எம்.எம். மன்சூர், துணைத் தலைவர்களான அஷ்ஷேக் ஃபாயிஸ்,  ரீசா வாஹித், உதவிச் செயலாளர் அஷ்ஷேக் ஸக்கி உள்ளிட்ட சம்மேளனப் பிரதிநிதிகள் குழுவினருடன்,  இலங்கைக்கான பாகிஸ்தானின் வதிவிடப்பிரதிநிதி  அப்சல் மரிக்கார் அவர்களும், கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் அவர்களிடம் இந்த நன்கொடையை வழங்கினர்.

இந்த நன்கொடை கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட ரூ. 2.5 மில்லியன் நன்கொடையின் தொடர்ச்சியாகும்.

சுதந்திரம், கண்ணியம் மற்றும் நீதிக்கான பலஸ்தீன மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வெளிப்பாடின் இரண்டாவது கட்டமாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

இந்த நிதி, கண்டி மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களின் இணைந்த முயற்சியில் திரட்டப்பட்டதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது, உலகளாவிய ஒடுக்குமுறை மற்றும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்பவர்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் உறுதியான ஆதரவை எடுத்துக்காட்டுகிறது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...