பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Date:

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் போலி அடையாளத்துடன் பல்வேறு பிரதேசங்களில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் விபரங்கள் :

1.பெயர் – ரஃபிக் மொஹொமட் ஃபாரிஸ்

2. தேசிய அடையாள அட்டை இலக்கம் – 761850466v

3. பிறப்பு – 1976.07.03

இந்த புகைப்படங்களில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் 071 – 8591735 அல்லது 071 – 8596507 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 65 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் வாகனம் ஒன்றை திருடியமை மற்றும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வாகனம் ஒன்றை விற்பனை செய்யவிருப்பதாக கூறி ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...