உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மே 05, 06 பாடசாலைகளுக்கு விடுமுறை

Date:

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05, 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, வாக்குச் சாவடிகளாக அமைக்கப்படும் பாடசாலைகளை மே 04ஆம் திகதி அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான மேசைகள், கதிரைகள், பாடசாலை மண்டபங்களுக்குள் செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் மே 06ஆம் திகதி நாடு முழுவதும் (ஒரு சில சபைகளைத் தவிர) உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, மே 07 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...