துபாயில் புதிய சம்பளச் சட்டம் வீட்டுப் பணியாளர்களுக்கு வங்கி கணக்கு மூலம் சம்பளம்

Date:

ஜக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் அமீரகப்படுத்தல் அமைச்சின் சம்பளப் பாதுகாப்புத் திட்டத்தில் வீட்டு பணியாளர்களையும் உள்ளடக்கி புதிய ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி வீட்டு பணியாளர்களுக்கான சம்பளம் அமீரகத்தின் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கிகள், பணப்பரிமாற்ற நிலையங்கள், நிதி நிறுவனங்கள் ஊடாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். அத்தோடு மாதத்துக்குரிய சம்பளம் குறித்த தினத்திலிருந்து குறித்த 10 நாட்களுக்கு மேற்படாமல் கொடுக்கப்பட வேண்டும்.

தவறென்ற பட்சத்தில் தொழில்தருநர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு சம்பளம் வழங்காத தொழில் தருநர்களுடைய பைல்கள் தடுத்து வைக்கப்படும்.

இந்த சட்டத்தை அமுல்படுத்துவற்கென அனைத்து தொழில் தருநர்களும் அமைச்சில் பதிவுசெய்யப்பட வேண்டும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில், 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...