அஸ்வெசும ஏப்ரல் மாத கொடுப்பனவு இன்று முதல் வழங்க நடவடிக்கை

Date:

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவு இன்று முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த கொடுப்பனவு  பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2025 வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கொடுப்பனவுகளும் இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள 1,737,141 குடும்பங்களுக்கு ரூ. 12.63 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற...

இந்தோனேசிய ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!

இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன (Sashikala Premawardhane), தனது...

சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு...