துபாயில் புதிய சம்பளச் சட்டம் வீட்டுப் பணியாளர்களுக்கு வங்கி கணக்கு மூலம் சம்பளம்

Date:

ஜக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் அமீரகப்படுத்தல் அமைச்சின் சம்பளப் பாதுகாப்புத் திட்டத்தில் வீட்டு பணியாளர்களையும் உள்ளடக்கி புதிய ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி வீட்டு பணியாளர்களுக்கான சம்பளம் அமீரகத்தின் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கிகள், பணப்பரிமாற்ற நிலையங்கள், நிதி நிறுவனங்கள் ஊடாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். அத்தோடு மாதத்துக்குரிய சம்பளம் குறித்த தினத்திலிருந்து குறித்த 10 நாட்களுக்கு மேற்படாமல் கொடுக்கப்பட வேண்டும்.

தவறென்ற பட்சத்தில் தொழில்தருநர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு சம்பளம் வழங்காத தொழில் தருநர்களுடைய பைல்கள் தடுத்து வைக்கப்படும்.

இந்த சட்டத்தை அமுல்படுத்துவற்கென அனைத்து தொழில் தருநர்களும் அமைச்சில் பதிவுசெய்யப்பட வேண்டும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...

பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...