பலஸ்தீனத்தில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆர்ப்பாட்டம்

Date:

பலஸ்தீனத்தில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி,நேற்று (23) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பலஸ்தீன குழந்தைகளின் வாழும் உரிமையை உறுதிப்படுத்து, கொழும்பிலிருந்து காசா வரை, கொலையை நிறுத்துங்கள், ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், பலஸ்தீனத்தை விடுவிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட சுலோக அட்டைகளை போராட்டக்காரர்கள்  ஏந்தி நின்றனர்.

பலஸ்தீனத்தில் இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தலைவர் எம்.என்.எம். ஷாம் நவாஸ் உட்பட சமூக செயற்பாட்டாளர், பலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...