மெதகெகில பிரீமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியஸ் அணி தெரிவு

Date:

தெல்தோட்டை, மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் வருடந்தோறும் நோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற மெதகெகில பிரீமியர்  லீக் மென்பந்து கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக முஹம்மட் அஜ்மிர் தலைமையிலான வெஸ்டர்ன் வொரியஸ் அணி தெரிவானது.

முஹம்மட் ஸனீர் தலைமையிலான ரோயல் செலேன்ஜர்ஸ் அணியினை வெற்றிக் கொண்டே இவ்வாறு வெஸ்டர்ன் வொரியஸ் அணி வெற்றி வாகை சூடியது.

கடந்த ஏப்ரல் மாதம் 02, 03ம் திகதிகளில் மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த தொடரில் மொத்தம் 08 அணிகள் மோதின.

லீக் முறையில் இடம்பெற்ற இந்த தொடரில் தமது முதல் 03 போட்டிகளிலும் தோல்வியினை தழுவி தொடரிலிருந்து வெளியேறும் நிலையிலிருந்த பெரோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டது அனைவராலும் பேசப்பட்ட ஒரு விடயமாக இருந்தது.

இந்த தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கேடயங்களை பிரபல சமூக சேவையாளர் கலாநிதி முனீர் ஸாதிக் (காஸிபி) அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...