உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களிடையே துயரத்தை ஏற்படுத்திய மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
தனது 88வது வயதில், பெருமூளை வாதம் மற்றும் அதனைத் தொடர்ந்த இதய செயலிழப்பு காரணமாக போப் பிரான்சிஸ் இறைவனடி சேர்ந்ததாக வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தத் துயரச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், வாடிகன் நிர்வாகம், திறந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் அவர்களின் உடலின் படங்களை வெளியிட்டுள்ளது.

