போப் பிரான்சிஸின் மறைவுக்கான அனுதாபப் புத்தகத்தில், நாளை வரை கையெழுத்திடலாம்..!

Date:

கத்தோலிக்கத் திருச்சபையின் புனித போப் பிரான்சிஸின் மறைவையொட்டி இரங்கலை வெளிப்படுத்துவதற்காக கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான வத்திகான் தூதரகத்தில் விசேட அனுதாபப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.

அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக வத்திக்கான் தூதரகம் நாளை காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும்.

புனித போப் பிரான்சிஸின் மறைவை முன்னிட்டு, பாப்பரசரின் கொடியையோ அல்லது கத்தோலிக்க கொடியையோ கத்தோலிக்க சபை உள்ளிட்ட நிறுவனங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கத்தோலிக்க திருச்சபை கோரியுள்ளது.

உலகளவில் அறியப்பட்ட  போப் பிரான்சிஸ்  88 வயதில் நுரையீரல் அழற்சி நோயால் 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவருக்கு உலகளாவிய ரீதியில்அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றன.

Vatican Embassy in Sri Lanka
Address:220 Bauddhaloka Mawatha

Colombo 07 

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...