மத நல்லிணக்கத்தின் அழகிய தருணம்: பெருநாள் தொழுகைக்கு பின் முஸ்லிம்களுக்கு இனிப்பு, தண்ணீர் வழங்கிய இந்துக்கள்!

Date:

முஸ்லிம்களின் புனித ரமழான் பெருநாள், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் சமூகம் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும்.

இந்த பெருநாளை முன்னிட்டு ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.

தொழுகை முடிந்ததும், அங்கு ஏற்பட்ட ஒரு அற்புதமான நிகழ்வு சமூக ஒற்றுமையின் அழகிய தருணமாக அமைந்தது.

பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு, அங்கிருந்த சில இந்து சமூகத்தினரால் குளிர்ந்த தண்ணீரும் இனிப்புக்களும் வழங்கப்பட்டன.

தண்ணீர் பெற்ற முஸ்லிம் சகோதரர்கள் இந்த நற்செயலுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

‘சமூகத்தினருக்குள் ஒற்றுமை இருந்தாலே நாடு இன்னும் உயர்ந்த முறையில் வளர்ச்சி அடையும். மதங்களின் வேறுபாடு இல்லாமல் சகோதரத்துவம் வளர வேண்டியது அவசியம்.

‘இது உண்மையான சகோதரத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டு. வெறும் பண்டிகை கொண்டாட்டமாக அல்ல, ஒற்றுமையை முன்னிறுத்தும் ஒரு நிகழ்வாகவும் இது விளங்குகிறது.

இந்த அழகிய தருணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பலரும் இதை பகிர்ந்து பாராட்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் மத நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் உதாரணமாக அமைகின்றன.

 

 

 

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...