15, 16, 17 ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு வழங்கும் முறையில் மாற்றம்

Date:

எதிர்வரும் ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிகளில் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பி.எம்.டி. நிலூஷா பாலசூரிய விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிகளில் நண்பகல் 12.00 மணி வரை மாத்திரமே ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளைப் பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நடைமுறையிலுள்ள 24 மணி நேர ஒருநாள் சேவையானது ஏப்ரல் 15 – 17 வரை இடம்பெறாது எனவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புதுவருடத்தை தொடர்ந்து தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லும் ஊழியர்களின் விடுமுறை காரணமாக, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...