சிஐடியில் இருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்‌ஷ!

Date:

பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (07) காலை ஆஜராகியிருந்தார்.

நாமல் ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாவது  தற்போது ஒரு பொதுவான நிகழ்வாகி விட்டது.

மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை தொடர்பில் வினவியபோது, நான் வீட்டிற்கு சென்று பார்த்த போது தந்தை மஹிந்த ராஜபக்ஷ நலமாக இருந்தார் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...