உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மே 05, 06 பாடசாலைகளுக்கு விடுமுறை

Date:

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05, 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, வாக்குச் சாவடிகளாக அமைக்கப்படும் பாடசாலைகளை மே 04ஆம் திகதி அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான மேசைகள், கதிரைகள், பாடசாலை மண்டபங்களுக்குள் செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் மே 06ஆம் திகதி நாடு முழுவதும் (ஒரு சில சபைகளைத் தவிர) உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, மே 07 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...