ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தல்

Date:

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. ரிக்டர் அளவில் 6.2 என நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜப்பானின் நிஷினூமோட்டிலிருந்து 54 கிமீ தொலைவில் நிலநடுக்கம் பதிவு பதிவாகியுள்ளது. இது பிலிப்பைன்ஸ் கடல் பகுதி என்றாலும், கரைக்கு நெருக்கமாக இருக்கிறது.

அந்நாட்டு நேரப்படி இரவு 11.03 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) படி, கியூஷு தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இதனால் நிலஅதிர்வு உணரப்பட்டது.

இதுவரை பெரிய அளவிலான சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. மூன்றாவது பெரிய தீவு கியூஷு அடிக்கடி நில அதிர்வுவுக்கு உள்ளாகும் இடமாகும்.

தற்போதைய நிலநடுக்கத்திற்கு பின்னர், உள்ளூர் நிர்வாகம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...