துபாயில் புதிய சம்பளச் சட்டம் வீட்டுப் பணியாளர்களுக்கு வங்கி கணக்கு மூலம் சம்பளம்

Date:

ஜக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் அமீரகப்படுத்தல் அமைச்சின் சம்பளப் பாதுகாப்புத் திட்டத்தில் வீட்டு பணியாளர்களையும் உள்ளடக்கி புதிய ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி வீட்டு பணியாளர்களுக்கான சம்பளம் அமீரகத்தின் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கிகள், பணப்பரிமாற்ற நிலையங்கள், நிதி நிறுவனங்கள் ஊடாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். அத்தோடு மாதத்துக்குரிய சம்பளம் குறித்த தினத்திலிருந்து குறித்த 10 நாட்களுக்கு மேற்படாமல் கொடுக்கப்பட வேண்டும்.

தவறென்ற பட்சத்தில் தொழில்தருநர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு சம்பளம் வழங்காத தொழில் தருநர்களுடைய பைல்கள் தடுத்து வைக்கப்படும்.

இந்த சட்டத்தை அமுல்படுத்துவற்கென அனைத்து தொழில் தருநர்களும் அமைச்சில் பதிவுசெய்யப்பட வேண்டும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...