துபாயில் புதிய சம்பளச் சட்டம் வீட்டுப் பணியாளர்களுக்கு வங்கி கணக்கு மூலம் சம்பளம்

Date:

ஜக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் அமீரகப்படுத்தல் அமைச்சின் சம்பளப் பாதுகாப்புத் திட்டத்தில் வீட்டு பணியாளர்களையும் உள்ளடக்கி புதிய ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி வீட்டு பணியாளர்களுக்கான சம்பளம் அமீரகத்தின் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கிகள், பணப்பரிமாற்ற நிலையங்கள், நிதி நிறுவனங்கள் ஊடாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். அத்தோடு மாதத்துக்குரிய சம்பளம் குறித்த தினத்திலிருந்து குறித்த 10 நாட்களுக்கு மேற்படாமல் கொடுக்கப்பட வேண்டும்.

தவறென்ற பட்சத்தில் தொழில்தருநர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு சம்பளம் வழங்காத தொழில் தருநர்களுடைய பைல்கள் தடுத்து வைக்கப்படும்.

இந்த சட்டத்தை அமுல்படுத்துவற்கென அனைத்து தொழில் தருநர்களும் அமைச்சில் பதிவுசெய்யப்பட வேண்டும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...

இலங்கையில் டித்வா சூறாவளியால் சுமார் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு: சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்.

இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர்...

துருக்கியில் விமான விபத்து: லிபியா நாட்டின் இராணுவ தளபதி உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு.

துருக்கி தலைநகர் அங்காராவில் நிகழ்ந்த பயங்கர விமான விபத்தில், லிபியா நாட்டின்...