தேஷபந்து தென்னகோனுக்கு மீண்டும் விளக்கமறியல்..

Date:

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன்  இன்று (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கடந்த 20 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தேசபந்து தென்னகோன் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை அன்றிலிருந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தேஷபந்து தென்னகோனை 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...