பலஸ்தீனத்தில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆர்ப்பாட்டம்

Date:

பலஸ்தீனத்தில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி,நேற்று (23) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பலஸ்தீன குழந்தைகளின் வாழும் உரிமையை உறுதிப்படுத்து, கொழும்பிலிருந்து காசா வரை, கொலையை நிறுத்துங்கள், ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், பலஸ்தீனத்தை விடுவிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட சுலோக அட்டைகளை போராட்டக்காரர்கள்  ஏந்தி நின்றனர்.

பலஸ்தீனத்தில் இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தலைவர் எம்.என்.எம். ஷாம் நவாஸ் உட்பட சமூக செயற்பாட்டாளர், பலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...