மோடியின் விஜயத்தை முன்னிட்டு 3 நாள் விசேட போக்குவரத்து!

Date:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (04) முதல் ஞாயிற்றுக்கிழமை (06) வரை சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து திட்டங்கள் பின்வருமாறு,

2025 ஏப்ரல் 04 – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் சாலை மாலை 6.00 மணி முதல் இரவு 10:00 மணி வரை அவ்வப்போது மூடப்படும்.

2025 ஏப்ரல் 05 – கொழும்பில் காலிமுகத்திடல் மற்றும் சுதந்திர சதுக்கப் பகுதிகளிலும், பத்தரமுல்ல “அபே கம” பகுதிகளிலும் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

2025 ஏப்ரல் 06 – அனுராதபுரம் நகரம், ரயில் நிலைய வீதி மற்றும் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதி பகுதிகளில் காலை 07.30 மணி முதல் காலை 10.30 மணி வரை அவ்வப்போது சாலைகளை மூடுவதற்கு சிறப்பு போக்குவரத்து திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு போக்குவரத்துத் திட்டங்களின் போது வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 04-06 வரை இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.

 

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...