வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 713 பேர் உயிரிழப்பு

Date:

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 685 வீதி விபத்துகளில் 713 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 744 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வீதி விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 28ஆக குறைந்துள்ளன.

2024 ஆம் ஆண்டில் சித்திரை புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற 103 வீதி விபத்துகளில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வீதி விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 23ஆக  குறைவடைந்துள்ளன.

அத்துடன், பதிவான மொத்த வீதி விபத்துகளில், மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்துகளால் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 781 மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களும் 194 பாதசாரிகளும் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...