இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதலில் மனிதநேய பணியாளர்கள் ஐவர் கொல்லப்பட்டனர்: IHH துருக்கி நிவாரண அமைப்பு கண்டனம்

Date:

காசா நகரத்தில் உள்ள அல்-நஃபாக் பகுதியில் துருக்கி இஸ்தான்புல்லை தலைமையிடமாகக் கொண்ட  IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளையின் திட்ட பணிப்பாளர் முகமது அல்-மபாயீத் கொல்லப்பட்டார்.

உலக உணவுத் திட்டத்துடன் IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை இணைந்து காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்றபோது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து மனிதநேய பணியாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா திட்டத்தில் பணிபுரியும் மனிதநேய பணியாளர்களான முகமது அல்-முபாயித், அகமது போஸ்டன், மொட்டாஸ் ரஜாப், இஷாக் அல்-தாயிஃப் மற்றும் ஜமால் அல்-மபாயீத், தாக்குதல்களில் கொல்லப்பட்டதுடன் இருவர் கடுமையாக காயமடைந்ததாக IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காசாவில் பலஸ்தீனியர்களுக்கு உதவி வழங்குவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மனிதாபிமான ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ‘கொடூரமான தாக்குதல்’ எனவும் ‘கடவுள் தியாகிகள் மீது கருணை காட்டட்டும், அவர்களின் குடும்பங்களுக்கும் பொறுமையை வழங்கட்டும் எனவும் IHH அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...