உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நிறைவு

Date:

மே மாதம் 9,10,11 ஆம் திகதிகளில் தமிழ்நாடு திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியற் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இனிதே நிறைவுற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸடாலின் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகளும் கருத்தரங்குகளும் இடம்பெற்றன.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கடல் கடந்த நாடுகளில் உள்ள பேராளர்களும் இலக்கியவாதிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இறுதிநாள் நிகழ்வின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்  காயல் மகபூத் அவர்களுக்கு அவருடைய இலக்கிய பணிகளுக்காக இலக்கியச் சுடர் விருது வழங்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான கே.என். பாஷா, ஜி.எம். அக்பர் அலி  ஆகியோர் இவ்விருதை வழங்கினார்.

இம்மூன்று நாள் மாநாட்டில் முஸ்லிம் மீடியோ போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...