க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் 21இல்

Date:

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் மே 21 முதல் 31 வரை நாடு முழுவதும் 1,228 தேர்வு மையங்களில் 171,100 பரீட்சார்த்திகளுக்காக நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எழுத்துத் தேர்வு மற்றும் நடைமுறைத் தேர்வுகள் இரண்டிலும் மாணவர்கள் தோற்றுவது கட்டாயம் என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனெனில் இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களும் பாடங்களின் இறுதி முடிவுகளைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும்.

பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை மே 19 முதல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk இல் இருந்து தேர்வு சுட்டெண் எண்ணை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்யலாம்.

மேலதிக விசாரணைகளுக்கு, பரீட்சார்த்திகள் 011-2784537, 2786616, 2784208, 011-2786200, 2784201 அல்லது 1911 என்ற தொலைபேசி எண்களில் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...