அல்குர்ஆன் தர்ஜுமாக்களை புதிய விளக்கங்களுடன் வெளியிடுவதற்கு சிபாரிசு செய்துள்ள முஸ்லிம் திணைக்கள குழு

Date:

2024.05.16 ஆம் தேதி புனித மக்காவில் வசிக்கின்ற இலங்கையரான சாதிக் ஹாஜியாரினால் அனுப்பி வைக்கப்பட்ட 15,000 குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளும் இன்று வரை சுங்கத்திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அல்குர்ஆனின் சிங்கள தமிழ் மொழி மூல மொழிபெயர்ப்புகளுடன் 20,000 அல்குர்ஆன் பிரதிகளும் இன்னும் சில இஸ்லாமிய நூல்களும் அடங்கிய கொள்கலன் 2024.06.22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது இதில் அல்குர்ஆன் பிரதிகளைத் தவிர ஏனைய நூல்கள் சுங்கத்திணைக்களத்தில் இருந்து வெளிவராமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

அல் குர்ஆனின் தமிழ் சிங்கள தர்ஜுமாக்களையும் ஏனைய நூல்களையும் வெளியில் எடுப்பதற்கு முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் நூல் விமர்சன மற்றும் வெளியீடுகள் குழு சிபாரிசு வழங்கியிருக்கவில்லை.

இந்நிலையில் அல்குர்ஆனின் தமிழ் சிங்கள தர்ஜுமாக்களில் மேலதிக விளக்கங்களை அடிக்குறிப்பிட்டு வெளியிடுவதற்கு முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் நூல் விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழு சிபாரிசு செய்துள்ளதாக தெரிய வருகிறது

குறித்த சிபாரிசு பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தினால் புத்த சாசன சமய விவகார மற்றும் கலாச்சார அமைச்சின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...