பஹல்காம் தாக்குதல் மனுவை விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு!

Date:

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கோரிய பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தெரிவித்தனர்.

மேலும் விசாரணை அமைப்புகளுக்கு மன சோர்வை ஏற்படுத்தும் வகையில் மனு உள்ளது என்று கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வெளி மாநிலங்களில் உள்ள ஜம்மு – காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்ச்னை இருந்தால் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தற்போதைய நிலையில் இந்த மனுவை விசாரிக்க முடியாது. மத்திய அரசு விசாரணை செய்து வருகிறது. அப்படி இருக்கும்போது, அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டும்.

நாட்டின் மீதான பொறுப்பு உங்களுக்கும் உள்ளது என, பொறுப்பற்ற பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் ஃபதேஷ் சாஹுவுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை: பாராளுமன்றத்தில் விசேட உரை

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின்...

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அவரது வீட்டில் சடலமாக மீட்பு.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!

நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்...

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...