காத்தான்குடி நகர சபையில் மு.கா. ஆட்சியமைப்பு – தவிசாளராக அஸ்பர்

Date:

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் 10 ஆசனங்களை வென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பான்மைப் பலத்துடன் காத்தான்குடி நகர சபையில் ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளது.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளராக எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதித் தவிசாளராக எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோரை நியமித்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ,பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவித்துள்ளார்.

தவிசாளர் சாஹுல் ஹமீத் முஹம்மத் அஸ்பருக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் செயலாளர் கட்சித் தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் முன்னிலையில் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (14) மாலை கையளித்தார்.

காத்தான்குடி நகர சபையின் 18 ஆசனங்களில் ஸ்ரீ ல மு கா 10, NPP 3, ஐக்கிய மக்கள் சக்தி 1, NFGG 2, இலங்கை தொழிலாளர் கட்சி 1, சுயாதீனக் குழு 1 ஆசனங்களை வென்றிருந்தன.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...