பலஸ்தீன ஆக்கிரமிப்பின் 77 ஆவது தினத்தை நினைவுகூரும் நக்பா தின நிகழ்வு

Date:

பலஸ்­தீன பூமி ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு இம்­மாதம் 15 ஆம் திக­தி­யுடன் 77 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன.

இதனை முன்­னிட்டு  விசேட நக்பா தின நிகழ்வு  கொழும்பில் உள்ள பலஸ்தீன அரசின் தூதரகம் மற்றும் பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழுவின் ஏற்பாட்டில்  ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் மஹிந்த சில்வா கேட்போர் கூடத்தில் மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.

‘நக்பாவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச நடவடிக்கை மற்றும் பலஸ்தீனிய மக்களின் மறுக்க முடியாத உரிமைகளை உணர்தல்’என்ற கருப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொள்வார்கள்.

மதத் தலைவர்கள், கொழும்பில் உள்ள இராஜதந்திர தூதரக அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலஸ்தீன ஆதரவு நண்பர்கள் பலரும் கலந்துகொள்வார்கள்.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...