பொலிஸாரிடம் பாதுகாப்பு வழங்குமாறு கோரிய தேசபந்து

Date:

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கோரிக்கை நேற்று (01) எழுத்து மூலம் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் மறைந்திருக்கும் குற்றவியல் கும்பல் தலைவரான கஞ்சிபாணி இம்ரான், பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை கொலை செய்வதாக மிரட்டியதாக அண்மைய நாட்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்தகைய சூழலில்தான், தனது பாதுகாப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தகுந்த பாதுகாப்பை வழங்குமாறு தேசபந்து தென்னகோன் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தேசபந்து தென்னகோனின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க பொலிஸ் பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்த உள்ளதாகவும், அவருக்குப் பாதுகாப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டால், அந்தப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...