புதிய உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஜூன் 2 இல் தொடங்கும்!

Date:

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி தொடங்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வென்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விதம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் விபரங்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.

மேலும், பெரும்பான்மை அதிகாரம் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள், நகரசபை தலைவர்களின் பெயர்களையும் சமர்ப்பிக்குமாறும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பான்மை அதிகாரங்களைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள், நகரசபை தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...