மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

Date:

கிழக்கு முஸ்லிம் கல்வி மன்றம் ஏற்பாட்டில் பேருவளை ஜாமியா நளீமியா உயர் கலாபீடத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மே 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு 09, தெமட்டகொட தாருல் ஈமான் அறக்கட்டளையின் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு முஸ்லிம் கல்வி மன்றத்தின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைநெறியின் முன்னாள் பீடாதிபதியும் பேராசிரியருமான எம்.எஸ்.எம். ஜலால்தின் தலைமை தாங்குவார்.

அத்துடன் இன்னும் பல அறிஞர்களுடைய சிறப்பு உரைகளும் இந்த நிகழ்வின் போது இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் விசேட அம்சமாக கலாநிதி சுக்ரி அவர்களைப் பற்றின் நூல்களும் இலவசமாக வழங்கி வைக்கப்படடவுள்ளன.

Popular

More like this
Related

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்: சிறை அதிகாரி மற்றும் காவலர் கைது!

கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது...