இலங்கை ஆய்வாளர் பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.

Date:

இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் அகீல் என்பவர் சவூதி அரேபியாவிலுள்ள மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டத்தை முதல்தர சித்தியுடன் பூர்த்தி செய்துள்ளார்.

‘இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் உல்லாசப் பயணத் துறையின் பங்கும் அதனை அபிவிருத்தி செய்தலும்’ – ஓர் ஆய்வு என்ற தலைப்பில் அவர் மேற்கொண்ட ஆய்வுக்கே இந்த கலாநிதி பட்டம் மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டது.

கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் ஆகில் அவர்கள் அக்குறணை அல் மீஸானிய்யா கலாசாலையில் கற்று வெளியேறிய குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஒருவர்.

காலியில் அமைந்திருக்கின்ற இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் தன்னுடைய ஷரியா துறை ஆரம்ப நிலைய பூர்த்தி செய்த இவர் மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் 2009ஆம் ஆண்டு இணைந்து தன்னுடைய உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

அந்தவகையில் பொருளாதாரத்துறையில் மிகச்சிறப்பான முறையில் சித்தியடைந்து கலாநிதி பட்டத்தை பெற்ற அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் அகீல் அவர்களை Newsnow.lk வாழ்த்துகிறது

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...