நீதிமன்றத்தில் சரணடைந்த பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

Date:

இன்று (07) நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை மே 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹர நீதிவான் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்துள்ளார்.

கிரிபத்கொடையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணவீர குற்றப் புலனாய்வுத் துறையால் தேடப்பட்டு வந்தார்.

கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த பிரசன்ன ரணவீர மற்றும் மற்றொரு சந்தேக நபரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...