நீதிமன்றத்தில் சரணடைந்த பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

Date:

இன்று (07) நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை மே 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹர நீதிவான் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்துள்ளார்.

கிரிபத்கொடையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணவீர குற்றப் புலனாய்வுத் துறையால் தேடப்பட்டு வந்தார்.

கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த பிரசன்ன ரணவீர மற்றும் மற்றொரு சந்தேக நபரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...