நேற்று இஸ்ரேல் சுதந்திர தினம்: இன்று பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

Date:

இஸ்ரேல் உருவாக்கப்பட்டு 77 வருடங்கள் நிறைவு ஏப்ரல் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் நடந்த இஸ்ரேல் சுதந்திர தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வொன்று இலங்கை இஸ்ரேல் நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘யௌம் ஹ ஆத்ஸ் மௌத்’ என அழைக்கப்படும் இந்த இஸ்ரேல் உருவாக்கப்பட்ட தினத்தை உலகெங்கும் உள்ள யூதர்களும் இஸ்ரேலை ஆதரிப்பவர்களும் அனுஷ்டிக்கின்றனர்.

சுதந்திரக் கொண்டாட்டங்களில் வழமையாக நடைபெறும் தீபமேற்றும் நிகழ்வு இஸ்ரேலைச் சூழ்ந்திருந்த காட்டுத் தீ காரணமாக நடைபெறவில்லை என்பதோடு விமான சாகசங்களும் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக இம்முறையை சுதந்திர நிகழ்வில் இடம்பெறவில்லை.

பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அங்கிருந்து 750,000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட நக்பா தினம் இன்று இலங்கையில் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகவும் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...