நேற்று இஸ்ரேல் சுதந்திர தினம்: இன்று பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

Date:

இஸ்ரேல் உருவாக்கப்பட்டு 77 வருடங்கள் நிறைவு ஏப்ரல் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் நடந்த இஸ்ரேல் சுதந்திர தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வொன்று இலங்கை இஸ்ரேல் நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘யௌம் ஹ ஆத்ஸ் மௌத்’ என அழைக்கப்படும் இந்த இஸ்ரேல் உருவாக்கப்பட்ட தினத்தை உலகெங்கும் உள்ள யூதர்களும் இஸ்ரேலை ஆதரிப்பவர்களும் அனுஷ்டிக்கின்றனர்.

சுதந்திரக் கொண்டாட்டங்களில் வழமையாக நடைபெறும் தீபமேற்றும் நிகழ்வு இஸ்ரேலைச் சூழ்ந்திருந்த காட்டுத் தீ காரணமாக நடைபெறவில்லை என்பதோடு விமான சாகசங்களும் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக இம்முறையை சுதந்திர நிகழ்வில் இடம்பெறவில்லை.

பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அங்கிருந்து 750,000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட நக்பா தினம் இன்று இலங்கையில் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகவும் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...