போலந்து வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை

Date:

போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radosław Sikorski), இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (28) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை இலங்கை வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வரவேற்றார்.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமைத்துவத்தை வகிக்கும் போலந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சிகோர்ஸ்கி, இன்று இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் உடன் உத்தியோகப்பூர்வ சந்திப்பை நடத்த உள்ளார்.

இந்த விஜயத்தின் நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதும், மேம்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்துவதுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து  வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி எதிர்வரும் மே 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்பதோடு இலங்கையின் பல்வேறு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...