ஹெலிகொப்டர் விபத்து: 6 பேர் உயிரிழப்பு; 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு நியமனம்

Date:

சிறப்புப் படையினரின் வழக்கமான பயிற்சி பணிகளின் போது, இன்று காலை (09) மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் பெல் 212 ஹெலிகொப்டர் மோதியதில் ஆறு வீரர்கள் உயிரிழந்ததாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விமானப்படையின் அறிக்கையில்,

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹிங்குராக்கொட தளத்தில் அமைந்துள்ள இலங்கை விமானப்படையின் 07 ஆம் இலக்க படைப்பிரிவைச் சேர்ந்த பெல்-212 ரக ஹெலிகாப்டர், இராணுவ விசேட படையணியினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்புக்கான செயல் விளக்கப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக இன்று (மே 09, 2025) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானது .

காலை 6.46 மணிக்கு ஹிங்குராக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், மாதுரு ஓயா இராணுவ விசேட படைதளத்தில் இருந்து விசேட படைப்பிரிவின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் ஒரு விளக்கப் பயிற்சியை காண்பிக்க ஆறு விசேட படை வீரர்களுடன் பயணம் செய்த சொற்ப வேளையில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த நேரத்தில், இரண்டு விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் உட்பட 12 பேர் விமானத்தில் பயணித்திருந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆரம்ப சிகிச்சைக்காக அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஹெலிகாப்டரில் இருந்த விமானப்படையை சேர்ந்து இரண்டு (Air Gunners) வான்வழி துப்பாக்கி வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...