ஹெலிகொப்டர் விபத்து: 6 பேர் உயிரிழப்பு; 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு நியமனம்

Date:

சிறப்புப் படையினரின் வழக்கமான பயிற்சி பணிகளின் போது, இன்று காலை (09) மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் பெல் 212 ஹெலிகொப்டர் மோதியதில் ஆறு வீரர்கள் உயிரிழந்ததாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விமானப்படையின் அறிக்கையில்,

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹிங்குராக்கொட தளத்தில் அமைந்துள்ள இலங்கை விமானப்படையின் 07 ஆம் இலக்க படைப்பிரிவைச் சேர்ந்த பெல்-212 ரக ஹெலிகாப்டர், இராணுவ விசேட படையணியினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்புக்கான செயல் விளக்கப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக இன்று (மே 09, 2025) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானது .

காலை 6.46 மணிக்கு ஹிங்குராக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், மாதுரு ஓயா இராணுவ விசேட படைதளத்தில் இருந்து விசேட படைப்பிரிவின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் ஒரு விளக்கப் பயிற்சியை காண்பிக்க ஆறு விசேட படை வீரர்களுடன் பயணம் செய்த சொற்ப வேளையில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த நேரத்தில், இரண்டு விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் உட்பட 12 பேர் விமானத்தில் பயணித்திருந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆரம்ப சிகிச்சைக்காக அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஹெலிகாப்டரில் இருந்த விமானப்படையை சேர்ந்து இரண்டு (Air Gunners) வான்வழி துப்பாக்கி வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...