20,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்; ஏழு பேர் உயிரிழப்பு

Date:

வருடத்தின் ஐந்து மாத காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 2,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

இந்நிலையில், டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாவதாகவும் அந்தப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

 

மேல் மாகாணத்திலேயே அதிகளவு டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, இக்காலப் பகுதியில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் 386 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர்  விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...