7 தூதுவர்களின் நற்சான்று பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு: இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவராக ரூவென் ஹவீயர் அசார் நியமனம்!

Date:

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

ஆர்ஜன்டீனா குடியரசு (Argentine Republic) சிம்பாப்வே குடியரசு (Republic of Zimbabwe), இஸ்ரேல் (Israel), பிலிபைன்ஸ் குடியரசு (Republic of the Philippines), தஜிகிஸ்தான் குடியரசு (Republic of Tajikistan), கம்போடியா இராச்சியம் (Kingdom of Cambodia) மற்றும் டென்மார்க் இராச்சியம் (Kingdom of Denmark) ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர்.

இன்று நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்களின் பெயர் விபரம் வருமாறு,

01.Mr. Mariano Agustin Caucino மாரியானோ அகுஸ்டின் கவ்சினோ – புதுடில்லியிலுள்ள ஆஜன்டீனா குடியரசின் தூதரகம்

02.Ms. Stella Nkomo ஸ்டெல்லா ந்கொமோ –  புதுடில்லியில் உள்ள சிம்பாப்பே  தூதரகம்

03. Mr. Reuven Javier Azar ரூவென் ஹவீயர் அசார் – புதுடில்லி இஸ்ரேல் தூதரகம்

04.Ms. Nina P. Cainglet  நினா பி. கயிங்லெட் – டகாவிலுள்ள பிலிபைன்ஸ் துதரகம்

05.Mr. Lukmon Bobokalonzoda லுக்மொன் போபோகலொன்சோடா – புது  டில்லியிலிருக்கும் தஜிகிஸ்தான் குடியரசு தூதரகம்

06.Ms. Rath Many ரத் மெனி – புதுடில்லியில் உள்ள கம்போடியா இராச்சியத்தின்  தூதரகம்

07.Mr. Rasmus Kristensen ரஸ்மஸ் கிறிஸ்டென்சன் – புதுடில்லியிலுள்ள டென்மார்க்  இராச்சியத்தின் தூதரகம்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...