கண்டியில் பல பகுதிகளுக்கு 36 மணி நேர நீர்வெட்டு…!

Date:

கண்டியில் பல பகுதிகளுக்கு 36 மணி நேரம் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (28) பிற்பகல் 2.00 மணி முதல் 30ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை 36 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

பேராதனை வீதி, வில்லியம்கோபல்லாவ மாவத்தை, நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இருந்து நகர சபை சந்திப்பு வரை, அஸ்கிரிய, குள சுற்றுவட்டம், ரஜ பிஹில்ல மாவத்தை, பூவெலிகட, தென்னகும்புர, குருதெனிய, அம்பிட்டிய மற்றும் கண்டி நகர மையத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக கண்டி மாநகர சபையின் மாநகர சபை ஆணையாளர் தெரிவித்தார்.

கண்டி குட்ஷெட் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளின் போது நீர் விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

சேதமடைந்த நீர் விநியோக அமைப்பை சரிசெய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதால், சேமிக்கப்பட்ட நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கண்டி மாநகர சபை கோரியுள்ளது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...